1

அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:

Then answered Bildad the Shuhite, and said,

2

அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.

Dominion and fear are with him, he maketh peace in his high places.

3

அவருடைய சேனைகளுக்குத் தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?

Is there any number of his armies? and upon whom doth not his light arise?

4

இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?

How then can man be justified with God? or how can he be clean that is born of a woman?

5

சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.

Behold even to the moon, and it shineth not; yea, the stars are not pure in his sight.

6

புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.

How much less man, that is a worm? and the son of man, which is a worm?