1

அல்லேலுூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.

Praise ye the LORD. Praise, O ye servants of the LORD, praise the name of the LORD.

2

இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.

Blessed be the name of the LORD from this time forth and for evermore.

3

சூரியன் உதிக்கும் திசைதொடங்கி, அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.

From the rising of the sun unto the going down of the same the LORD’S name is to be praised.

4

கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.

The LORD is high above all nations, and his glory above the heavens.

5

உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?

Who is like unto the LORD our God, who dwelleth on high,

6

அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.

Who humbleth himself to behold the things that are in heaven, and in the earth!

7

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.

He raiseth up the poor out of the dust, and lifteth the needy out of the dunghill;

8

அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.

That he may set him with princes, even with the princes of his people.

9

மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலுூயா.

He maketh the barren woman to keep house, and to be a joyful mother of children. Praise ye the LORD.