1

கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

O give thanks unto the LORD; for he is good: for his mercy endureth for ever.

2

தேவாதி தேவனைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது.

O give thanks unto the God of gods: for his mercy endureth for ever.

3

கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

O give thanks to the Lord of lords: for his mercy endureth for ever.

4

ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

To him who alone doeth great wonders: for his mercy endureth for ever.

5

வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

To him that by wisdom made the heavens: for his mercy endureth for ever.

6

தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

To him that stretched out the earth above the waters: for his mercy endureth for ever.

7

பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;

To him that made great lights: for his mercy endureth for ever:

8

பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

The sun to rule by day: for his mercy endureth for ever:

9

இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;

The moon and stars to rule by night: for his mercy endureth for ever.

10

எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

To him that smote Egypt in their firstborn: for his mercy endureth for ever:

11

அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

And brought out Israel from among them: for his mercy endureth for ever:

12

பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

With a strong hand, and with a stretched out arm: for his mercy endureth for ever.

13

சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

To him which divided the Red sea into parts: for his mercy endureth for ever:

14

அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

And made Israel to pass through the midst of it: for his mercy endureth for ever:

15

பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

But overthrew Pharaoh and his host in the Red sea: for his mercy endureth for ever.

16

தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

To him which led his people through the wilderness: for his mercy endureth for ever.

17

பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

To him which smote great kings: for his mercy endureth for ever:

18

பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

And slew famous kings: for his mercy endureth for ever:

19

எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Sihon king of the Amorites: for his mercy endureth for ever:

20

பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

And Og the king of Bashan: for his mercy endureth for ever:

21

அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

And gave their land for an heritage: for his mercy endureth for ever:

22

அதைத் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Even an heritage unto Israel his servant: for his mercy endureth for ever.

23

நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Who remembered us in our low estate: for his mercy endureth for ever:

24

நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

And hath redeemed us from our enemies: for his mercy endureth for ever.

25

மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Who giveth food to all flesh: for his mercy endureth for ever.

26

பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

O give thanks unto the God of heaven: for his mercy endureth for ever.